சிங்கப்பூரில் குளுகுளு சாலையா??

சிங்கப்பூரில் குளுகுளு சாலையா??

சிங்கப்பூர்: சென்டோசா மேம்பாட்டு கழகம் ஒரு புதிய சாலை வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

வெப்பநிலையை குறைக்க உதவும் வகையில் குளிர்ந்த ஓய்வு பகுதிகளுடன் கூடிய இந்த சாலையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தீவில் குறைந்தது பத்து இடங்களில் குளிர் ஓய்வு நிலையங்கள் அல்லது ஓய்வு பகுதிகளை அமைக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

பார்வையாளர்களின் உணரப்பட்ட வெப்பநிலையை குறைக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது.

இதனால் தீவில் வெகு நேரம் பார்வையாளர்கள் தங்குவார்கள்.

இந்த ஆண்டு(2025) மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடத்தில் சென்டோசாவில் உள்ள சில கடற்கரைகளில் 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது.

 

இதனால் அங்கு வரும் பார்வையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இதனை தடுப்பதற்காக சிலோசா கடற்கரையில் மூடுபனி குளிரூட்டும் முறையை அதிகாரிகள் சோதித்து வருவதாக சென்டோசா மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் மா லிஹாவோ தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளியை பிரதிபலிக்கவும் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இந்த சுவர்கள் ஒரு சிறப்பு பாதுகாப்பாக இருக்கும் என்று அடுக்குடன் பூசப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீவில் தற்போது இரண்டு குளிரூட்டும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 8 குளிரூட்டு நிலையங்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையங்கள் அங்கு வரும் பொது மக்களுக்கு எளிதாக அணுகும் வகையில் அமையும் எனவும் தெரிவித்தனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK