கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…???

கேலாங்கில் காதல் கலவரம்...!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி...???

சிங்கப்பூர்: கேலாங்கில் உள்ள காபி கடையில் பீர் விற்பனையாளராக வேலை செய்த 37 வயதான சீனாவைச் சேர்ந்த ஃபாங் லி, தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனால் நீதிமன்றம் அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலை கேலாங் லோரோங் 14 பகுதியில் நடந்தது.

அந்த நேரத்தில், காதலனும் காதலியும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.

இருவரும் மது அருந்திய நிலையில் வீடு திரும்பியபின், மது பழக்கம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, காதலன் காதலியை இருமுறை அறைந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கோபமடைந்த ஃபாங், மேஜையில் இருந்த சுமார் 9 செ.மீ நீளமுள்ள கத்தியை எடுத்து காதலனின் வயிற்றில் இருமுறை குத்தினார்.

இதனால் படுகாயமடைந்த காதலன் நிலைகுலைந்து தரையில் விழுந்த நிலையில், ஃபாங் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று உதவியை கேட்டார்.

இதனால் பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் காயமடைந்தவர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது கல்லீரல் குத்தப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால், சிகிச்சை செலவுக்கான கவலையால் அவர் சிகிச்சையை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ச்சியான அசௌகரியம் மற்றும் அதிக காய்ச்சல் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃபாங் லிக்கு தற்போது 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan