கேலாங்கில் காதல் கலவரம்...!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி...???
சிங்கப்பூர்: கேலாங்கில் உள்ள காபி கடையில் பீர் விற்பனையாளராக வேலை செய்த 37 வயதான சீனாவைச் சேர்ந்த ஃபாங் லி, தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனால் நீதிமன்றம் அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலை கேலாங் லோரோங் 14 பகுதியில் நடந்தது.
அந்த நேரத்தில், காதலனும் காதலியும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.