ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி... அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள்,உடனடி செய்தி தளங்கள்,தொலைபேசிகள்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைச் சிக்கவைக்கின்றனர் என்று காவல்துறை தரவு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட மோசடி மற்றும் சைபர் கிரைம் புள்ளி விவரங்கள், மோசடிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் மெட்டாவிற்கு சொந்தமான facebook, instagram,whatsapp எனக் காட்டுகின்றன.
கிட்டத்தட்ட சுமார் 37% வழக்குகள் இத்தளங்கள் மூலமாகவே நடந்துள்ளன.
மேலும்,TikTok மூலமாக நிகழும் மோசடிகள் இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
அதேபோல்,Telegram மற்றும் Carousell தொடர்பான மோசடிகளும் தொடர்ந்து அதிக விகிதத்தில் பதிவாகியுள்ளன.
இதனால், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டில் அதிக எச்சரிக்கை தேவைப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.