இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன?

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் - சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன?

சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29, 2025) பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

டெலிவரி ஓட்டுனர் ஒருவர் போலீஸ் வாகனத்தில் மோதி இறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டத்தில் கலவரக்காரர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அதிகாரிகள் அமைதிப்படுத்த முயன்றனர். மேலும் ஜனாதிபதி அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

வியாழக்கிழமை(28 ஆம் தேதி) தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்த ஊதியம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பரமான சலுகைகள் மற்றும் அரசாங்கம் பொருளாதாரத்தை கையாளும் விதம் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸ் காரர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன.


வெள்ளிக்கிழமை(29 ஆம் தேதி) இரவு மக்காசர் நகரில் உள்ள ஒரு கவுன்சில் கட்டிடத்தில் போராட்டக்காரர்கள் தொடங்கிய தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் இறந்துள்ளனர். பண்டுங், யோககர்த்தா, செமராங் மற்றும் சுரபயா ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்ததாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) தனது குடிமக்களை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் உள்ளூர் செய்திகள் மூலம் முன்னேற்றங்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கவனிக்க வேண்டும் என சிங்கப்பூர் தூதரகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள அல்லது பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சகத்தில் http://eregister.mfa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் மின் பதிவு செய்ய செய்து கொள்ளுதல் அவசியம் என கூறப்பட்டுள்ளது.

“நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உங்கள் குடும்பத்தினரும் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்” என்று தூதரகம் கூறியுள்ளது.

உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ளலாம்:

ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் தூதரகம்
முகவரி : பிளாக்

பாடாமில் உள்ள சிங்கப்பூர்க் குடியரசின் துணைத் தூதரகம்
முகவரி: நிலை 3 பன்பில் குடியிருப்பு, ஜலான் அஹ்மத் யானி, முகா குனிங், படாம் 29433, இந்தோனேஷியா
மின்னஞ்சல்: singcon_bth@mfa.sg
தொலைபேசி: +627783720000
அவசரத் தொலைபேசி (491 மணிநேரத்திற்குப் பிறகு): +1602 மணி நேரம்

மேடானில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் துணைத் தூதரகம்
முகவரி: சூட் எண் 2 – 6, 11வது தளம், மன்றம் ஒன்பது அலுவலகம் மற்றும் எஃப் & பி கேலரி, எண். 9 ஜாலான் இமாம் போன்ஜோல், 20112 மேடன், இந்தோனேசியா
மின்னஞ்சல்: sporeconsulatemedan@mfa.sg
தொலைபேசி: +62-61-8050-1500
அவசர தொலைபேசி (நேரங்களுக்குப் பிறகு): +62-811-6170-339

வெளியுறவு அமைச்சக கடமை அலுவலகம் (24 மணிநேரம்)
மின்னஞ்சல்: mfa_duty_officer@mfa.gov.sg
தொலைபேசி: +65 6379 8800 / +65 6379 8855