சிங்கப்பூரில் அதிகரிக்கும் சிங்பாஸ் மோசடி..!! காவல்துறை எச்சரிக்கை..!!
சிங்கப்பூர்: ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் ஊழியர்களைப் போல் நடித்து வேலைவாய்ப்புகளை வாங்கி தருவதாகக் கூறி அவர்களின் சிங்பாஸ் (Singpass) அரசு கடவுச் சொற்களில் தகவல்களைத் திருடும் புதிய மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறைத் தடுப்பு மையமும் சிங்பாஸ் குழுவும் இணைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இது போன்ற 20 மோசடிகளைக் கண்டறிந்துள்ளன.
இது குறித்த இன்று (மே 15) காவல்துறையும் அரசாங்க தொழில்நுட்ப முகமையும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மோசடிகளில் மோசடிக்காரர்கள் பொதுவாக முறையான ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் போல் நடித்து டெலிகிராம் அல்லது கரோசெல் போன்ற தலிங்களில் கச்சேரி ஊழியர்களுக்கான விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
ஆர்வமுள்ளவர்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளத் தொடர்பு எண்கள் மூலம் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்ட பிறகு, அவர்களது பெயர், அடையாள அட்டை, எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்கள் வாங்கிக் கொள்கின்
வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் எனப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் கேட்டு வாங்கி கொள்கின்றனர். சில சமயங்களில் நம்பிக்கைத் தன்மையை அதிகரிப்பதற்காக மோசடிக்காரர்கள் தாங்கள் ஆள்மாற்றம் செய்யும் ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் உரிம எண்களையும் வழங்குகிறார்கள்.
இது பாதிக்கப்பட்டவர்கள் மனித வள அமைச்சகத்தின் இணையத்தில் அவர்கள் சரிபார்க்க அனுமதிக்கிறது. மோசடிக்காரர்கள் தகுதிச் சான்றிதழ் அல்லது இசை நிகழ்ச்சி அனுமதி சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க உதவுவதாக கூறி பாதிக்கப்பட்டவர்களின் சிங்பாஸ் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள்.
தொடர்பு தகவல் மாற்றபட்டவுடன் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் சிங்பாஸ் கணக்கை மீட்டமைத்து லிக்விட்பே மற்றும் யூட்ரிப் போன்ற நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறக்க அதை பயன்படுத்திக் கொள்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை அறிவிக்கப்பட்ட பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வார்கள்.
அங்கீகரிக்கப்படாத உள் நுழைவுகள் மற்றும் கணக்குத் தகவல்களில் ஏற்படும் மாற்றங்களை தடுப்பதற்கு சிங்பாஸில் முகத்தை அடையாளம் காணுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களின் சிங்பாஸ் கணக்கின் தொடர்பு தகவல்களை மோசடிக்காரர்கள் வழங்கிய தகவல்களுக்கு மாற்றுவதன் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது மோசடிக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களைப் (OTP) பெற்றுக் கணக்கை கைப்பற்ற அனுமதிக்கிறது.
ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனம் செல்லுபடியாகும் உரிம எண்ணி வழங்கினால் அது சட்டபூர்வமானது அல்ல எனவும், சிங்கப்பூரில் வேலைக்கு சேர காவல்துறை அனுமதி சான்றிதழ் ஒரு கட்டாய ஆவணம் அல்ல எனவும் காவல்துறை கூறி இருக்கிறது.
மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் மற்றும் புகார்களுக்கு www scamshield.gov.sg என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் அல்லது 1799 என்ற Scamshield மோசடி தடுப்பு உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.