சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! பயணிகளின் நிலை?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! பயணிகளின் நிலை?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்தபோது திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

அஜர்பைஜானை சேர்ந்த 52 வயது ஆடவர் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களை விமான பயணத்தின் போது சீனாவைச் சேர்ந்த 26 வயது லியூ மிங் என்பவர் திருட முயன்றுள்ளார்.

என்ன திருட்டு சம்பவத்தை 52 வயது ஆடவரின் மனைவி பார்த்தவுடன் விமான பணி பெண்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த பெட்டியில் இருந்தால் பொருட்களுடைய மதிப்பானது சுமார் 1,00,000 வெள்ளிக்கும் மேல் ஆகும்.

சாங்கி விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் அனுப்பி காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியதும் குற்றவாளியான லியூ கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரித்தபோது, பிசினஸ் கிளாஸ் பயணிகளிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக அதே பிரிவில் பயணித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் குண்டால் கொம்பல் ஒன்று இவருக்கு உதவியதாகவும் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரியவந்துள்ளது.

திருட முயன்ற ஆடவருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருடிய குற்றத்திற்காக இவருக்கு மூன்றாண்டு காலம் இறை தண்டனையும் அதனுடன் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK