தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!!
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் நிறுவப்பட்டு 60 ஆண்டு நிறைவடைந்ததை நினைவு கூறுகின்ற வகையில், புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா என்ற நிறுவனம் ஒரு வெளியிட்ட தயாரிப்பதாக அண்மையில் கூறி வருவதாக தகவல் தெரிந்ததாக பாதுகாப்பு அமைச்சு இன்று (மே 8) முகநூலில் பதிவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கும் புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா நிறுவனத்துடன் எந்த உடன்பாடம் செய்யவில்லை என அதிகாரிகள் தெளிவாக கூறியுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் வெளியீடுகளும் உள்ளடக்கங்களும் பாதுகாப்பு அமைச்சகத்தாலும் அல்லது சிங்கப்பூர் ஆயுதப்படைகளாலும் ஆணையிட்டு வெளியிடப்படவில்லை. மேலும் அதிகாரிகளாலும் அவை அங்கீகரிக்கப்படவில்லை.
இது தொடர்புடைய பதிப்பு திட்டங்களில் பங்கேற்பதற்காக அந்த நிறுவனத்தால் தொடர்பு கொள்ளப்பட்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகள் தங்கள் முடிவுகளை எடுக்கும் பது மேற்கூறிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.