அதிர்ச்சி.!பெடோக் வடக்கில் பயங்கர விபத்து..!!

அதிர்ச்சி.!பெடோக் வடக்கில் பயங்கர விபத்து..!!

சிங்கப்பூர்: பெடோக் வடக்கில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது.இந்த விபத்தில் 62 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று (15.10.25) மாலை 5:15 மணியளவில் பெடோக் வடக்கு தெரு 3 இலிருந்து பெடோக் வடக்கு அவென்யூ 2 செல்லும் சாலையில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 62 வயதுடைய பாதசாரி ஒருவர் லாரி மோதியதால் படுகாயமடைந்தார். அவர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார்.

சிவில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினரின் தகவலின் படி, விபத்தில் சம்பந்தப்பட்ட 69 வயதுடைய லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK