சிங்கப்பூரில் முதல் தொண்டு பிசியோதெரபி மையம்..!!!

சிங்கப்பூரில் முதல் தொண்டு பிசியோதெரபி மையம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் முன்னர் பணியாற்றிய 30 வயதான பிசியோதெரபிஸ்ட் ஹுவாங் குவாக்ஸியோங், நோயாளிகள் அடிக்கடி எதிர்கொள்ளும் நீண்ட காத்திருப்பு நேரம் மற்றும் அதிக செலவுகளை குறைப்பதற்காக, சிங்கப்பூரின் முதல் தொண்டு பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு மையமான “தி ரிஹாப் சர்க்கிள்”- ஐ நிறுவியுள்ளார்.

ஹுவாங் தெரிவித்ததாவது, “பல நோயாளிகள் மறுவாழ்வு சிகிச்சைபெறுவதில் தடைகளை சந்திக்கிறார்கள். வெளிப்படையான கட்டணங்களுடன், சமூகத்தின் தேவைகளுக்கேற்ப ஒரு மையத்தை உருவாக்க விரும்பியதாக கூறினார்.

மற்ற மருத்துவ நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த மையத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே நேரடியாக சந்திப்பு மேற்கொள்ளலாம் என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.

பயனியர் வெஸ்டில் அமைந்துள்ள இந்த மையம், கோர் படுக்கைகள்,ட்ரேபீஸ் டேபிள்கள், பைலேட்ஸ் உபகரணங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் செயல்படுகிறது. இங்கே, நோயாளிகளின் தசை கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான முதியோரை உருவாக்கவும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

 

கட்டண விவரங்கள்:

👉ஒவ்வொரு 30 நிமிட சிகிச்சைக்கும் $20 முதல் $100 வரை.

👉கட்டணங்கள், பாலிகிளினிக் தரத்துடன் ஒப்பிடத்தக்கவை.

👉நோயாளியின் நிதிநிலைபடி கட்டணம் சரிசெய்யப்படும்.

👉CHAS அட்டைதாரர்கள்,Pioneer Generatio,Merdeka Generation ஆகியோருக்கு மானியம்.

👉MediFund பெறுநர்களுக்கு முழு கட்டண விலக்கு.

எதிர்காலத்தில், இந்த மையம் இலவச குழு உடற்பயிற்சி வகுப்புகள், நாள்பட்ட வலி நிவாரணம், விழுந்து விடுதல் தடுப்பு போன்ற சுகாதார பட்டறைகளையும் நடத்த உள்ளது.

இதுகுறித்து ஹுவாங் குவாக்ஸியோங் தெரிவித்ததாவது,“மீட்பு வட்டம் முதியவர்களுக்கே அல்லாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சமூகமெங்கும் சேவை செய்யும்” என்று கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK