சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் காய்ச்சல் (Influenza) பாதிப்பு சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது நிலைமை வழக்கத்தைவிட தீவிரமாக இல்லை என தொற்றுநோய் மேலாண்மை அமைப்பு (CDA) தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காய்ச்சலால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் அதிக ஆபத்துள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
CDA செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், சமூகத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 36.6% மாதிரிகளில் Influenza வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் இந்த விகிதம் 24% ஆக இருந்தது. அதாவது, ஒரே வாரத்தில் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்படும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டு(2025) ஜனவரி மாதத்தில் பதிவான காய்ச்சல் உச்சநிலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் Influenza Positive Rate 43.9% ஆக பதிவாகியிருந்தது.
சிங்கப்பூரில் பருவகால காய்ச்சல் வைரஸ் ஆண்டு முழுவதும் பரவி வருவதாக தேசிய கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மே முதல் ஆகஸ்ட் வரையிலும், டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களின் குளிர்காலத்துடன் தொடர்புடையவை.
இருப்பினும், சர்வதேச பயணங்கள், மக்கள் இடையேயான தொடர்பு மற்றும் பிற காரணிகளால் ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் பாதிப்பு உச்சத்தை அடையும் காலம் மாறுபடலாம் என CDA தெரிவித்துள்ளது.
Influenza தொற்று ஏற்பட்டால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள், குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள CDA பரிந்துரைத்துள்ளது.குறிப்பாக:
👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்
👉 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்
👉ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள்
👉 Influenza தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் அதிக ஆபத்துள்ளவர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் எங்கு தடுப்பூசி செலுத்தலாம்?
பொதுமக்கள் vaccine.gov.sg/flu இணையதளம் மூலம் CHAS திட்டத்தில் பங்கேற்கும் பொது மருத்துவ கிளினிக்குகளில் Influenza தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யலாம்.
மேலும், Polyclinic-களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். Healthier SG திட்டத்தில் இணைந்துள்ளவர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள கிளினிக்கிலும் தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம்.
தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளபோதிலும், நிலைமை வழக்கத்தைவிட தீவிரமாக இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என CDA தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிக ஆபத்துள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பூசி பெறுவது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
