அதிர்ச்சி..!! சுன் ஸ்வீ சாலையில் நடந்த பயங்கரம்..!!

அதிர்ச்சி..!! சுன் ஸ்வீ சாலையில் நடந்த பயங்கரம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுன் ஸ்வீ சாலையில் இன்று (08.11.25) அதிகாலை நடைபெற்ற கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது, அதிகாலை 3.10 மணியளவில் பிளாக் 51 அருகே உதவி கோரிய அழைப்பு ஒன்று கிடைத்தது.

இதனால் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், 56 வயதுடைய ஒரு நபர் வீட்டிற்கு வெளியே மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியதில், இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 36 முதல் 59 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கொலையாக வகைப்படுத்தப்பட்டு தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK