டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..??
உலகின் மிகப்பெரிய பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆளராக இந்தியா நாடு திகழ்ந்து வருகிறது வருடாந்தோறும் பில்லியன் கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மிக முக்கியமான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் திகழ்கின்றன.
தற்போது மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக டன் கணக்கில் பாசுமதி அரிசியானது தேங்கியுள்ளது.
இதனால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்ட காரணத்தினால் பாசுமதி அரிசியானது அனுப்புவதற்கு கப்பல்கள் கிடைக்காத காரணத்தினால் இந்திய துறைமுகத்தில் தேங்கியுள்ளது என்று இந்திய அரசு ஏற்றுமதியாளர்கள் சங்கம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் கிட்டத்தட்ட 1,81,400 முதல் 2,26,800 தங்கள் வரையிலான பாசுமதி அரிசி தேங்கியுள்ளது என அச்சங்கத்தின் தலைவர் சதீஷ் கோயல் புளூம் பெர்க்கிடம் கூறியுள்ளார்.
இந்த சூழலில் கப்பல்களை முன்பதிவு செய்வது சற்று கடினமாக உள்ளதாகவும் துறைமுகங்களில் அரிசியை தேக்கி வைப்பதற்காக ஒதுக்கப்படும் இடங்களுக்கான வாடகையை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்த தாமத காலகட்டத்தில் ஏற்படும் செலவுகளை ஈடு கட்டுவதற்கு தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் மார்ச் இரண்டாம் தேதி அழித்தால் நேர்காணலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போக்குவரத்து பாதிக்கப்பட்ட காரணத்தினால் சரக்கு கட்டணம் காப்பூர் தி செலவு ஆகிய கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தற்போது பதற்றம் நிலவி வருகிறது. இந்த காரணத்தினால் ஏற்றுமதியாளர்களின் லாபங்கள் குறைவதோடு இறக்குமதி செய்யும் நாடுகளில் உணவுப் பொருள்களின் விலையும் உயர்வதற்கான அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் தரவுகளின் படி டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் இந்தியா சுமார் 4 பில்லியன் (சுமார் 5.1 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) மதிப்பிலான 4.26 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.