விரைவுச்சாலையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 26 வயது இளைஞர்!!

விரைவுச்சாலையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 26 வயது இளைஞர்!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் ஏப்ரல் 24-ஆம் தேதியன்று(நேற்று) ஜலான் பஹார் அருகே உள்ள PIE இல் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து காலை 10.15 மணியளவில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.

துரதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அதனை SCDF துணை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.