பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய ஆடவர்..!! ஆடவரின் நிலை..??

பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய ஆடவர்..!! ஆடவரின் நிலை..??

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ் அவரின் மகன் முரளி கிருஷ்ணா (16). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்பதாம் வகுப்பு படித்த இவர் தனது நண்பர்களுடன் அந்த நேரத்தில் பந்தயம் ஒன்று வைத்துள்ளார்.

அந்த வகையில் அவரது நண்பர்கள் சிலர் பந்தயம் ஒன்றை கூறினர். அது என்னவென்றால், ஒரு பேனாவை அப்படியே விழுங்கினால் 50 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.

அந்த பேனாவை விழுங்கியுள்ளார்.

அன்றிலிருந்து அவருக்கு வயிற்று வலி தீவிரமாக இருந்துள்ள நிலையிலும் பெற்றோருக்கு பயந்து அவரை இந்த பந்தயத்தை பற்றி கூறவில்லை.

அந்நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி அன்று அவர் கடுமையான வயிற்று வலியால் துடைத்துள்ளார் இதை அறிந்த முரளி கிருஷ்ணனின் நண்பர்கள் அவரது பெற்றோரிடம் பேனாவை விழுங்கியதை பற்றி தெரிவித்தனர்.

இதை அறிந்து பதற்றம் அடைந்த முரளி கிருஷ்ணனின் பெற்றோர் உடனடியாக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட பரிசோதனையில் முரளி கிருஷ்ணாவின் பெருங்குடலில் பேனா சிக்கியுள்ளது தெரிய வந்தது.

உடனடியாக மருத்துவர்கள் “எண்டோஸ்கோபி” முறையில் பெருங்குடலில் சிக்கி இருந்த பேனாவை அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றியுள்ளனர்.

அந்தப் பேனாவை மருத்துவர்கள் அகற்றியதால் அவரின் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK