சிங்கப்பூரில் வெறும் 5 நாட்களில் 99 பேர் பிடிபட்டதன் பின்னணி..!!!

சிங்கப்பூரில் வெறும் 5 நாட்களில் 99 பேர் பிடிபட்டதன் பின்னணி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (CNB) தீவு முழுவதும் விரிவான போதைப்பொருள் சோதனையை நடத்தி 5 நாட்களில் 99 பேரை கைது செய்தது. இதற்குட்பட்ட நடவடிக்கைகளில் எட்டோமைடேட் சந்தேகப்படும் மின்-சிகரெட் தோட்டாக்கள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, சந்தை மதிப்பு S$38,000 ஐத் தாண்டியுள்ளது.

பிப்ரவரி 2 முதல் 6 வரை அங் மோ கியோ, சோவா சூ காங், ஜூரோங், மரைன் பரேட், மார்சிலிங் மற்றும் செம்பவாங் பகுதிகளில் CNB தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதிகாரிகள் சுமார் 210 கிராம் கஞ்சா, 146 கிராம் ஹெராயின், 80 கிராம் மெத்தம்பேட்டமைன், 7 கிராம் கெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் 75 மின்-சிகரெட் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

பிப்ரவரி 3 அன்று தெங்கா பகுதியில் ஒரு குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட CNB அதிகாரிகள், 31 வயது ஆண் மற்றும் 24 வயது பெண்ணை கைது செய்தனர்.
அவர்கள் அதிகாரிகளின் நுழைவைத் தடுக்க முயன்றனர்.பின்னர் அதிகாரிகள் கதவை வலுக்கட்டாயமாக உடைத்து மெத்தம்பேட்டமைன் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

பிப்ரவரி 4 அன்று சோவா சூ காங் பகுதியில் CNB ஒரு 26 வயது உள்ளூர் நபரை கைது செய்தது. அவரது படுக்கையறையில் சுமார் 123 கிராம் கஞ்சா, 6 கிராம் கெட்டமைன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் பறிமுதல் செய்யபட்டன.

பிப்ரவரி 5 அன்று மார்சிலிங் பகுதியில் CNB இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தது.63 வயது போதை பயன்படுத்திய சந்தேக நபர் மற்றும் 65 வயது போதை கடத்தல் சந்தேக நபர். அவர்களின் வீடுகளில் சிறிய அளவு ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே பகுதியின் மற்றொரு குடியிருப்பில், 52 முதல் 69 வயது உள்ளூர் மூன்று ஆண்களை கைது செய்து, சுமார் 15 கிராம் ஹெராயின், 12 கிராம் மெத்தம்பேட்டமைன், போதை உபகரணங்கள் மற்றும் S$6,626 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக CNB அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK