ICA எவ்வாறு கடத்தல் வழக்குகளை கட்டுப்படுத்தியது..?? இதில் முக்கிய பங்கு என்ன..??

ICA எவ்வாறு கடத்தல் வழக்குகளை கட்டுப்படுத்தியது..?? இதில் முக்கிய பங்கு என்ன..??

குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயம் பெரும் அளவிலான தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து தரவு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி புதிய வழிகளை கண்டறிந்து அதிக அபாயம் உள்ள பயணிகள் வாகனங்கள் மற்றும் சரக்குகளை குறிப்பதற்காக இலக்கு நிர்ணய விதிகளை உருவாக்குகிறது விளக்கம் அளித்த முகநூலில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த மையம் உண்மையான அமலாக்கத் திறனின் அடிப்படையில் தனது நடைமுறைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய குற்றப் போக்குகளை கண்டறிவதற்காக, தனிநபர்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளை ஆராய இந்த மையம் வளையமைப்பு பகுப்பாய்வை பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு சந்தேகத்திற்கு உள்ளான நபர்களை குறைப்பதற்காக ஒரு மதிப்பெண் வழங்கும் முறையை பயன்படுத்துகிறது. இதன் மூலமாக சிறப்பு கவனம் தேவைப்படும் அதிக ஆபத்துள்ள பணியாளர்கள் வாகனங்கள் மற்றும் பொருட்களை தனியாக நீக்குகிறது.

ஆய்வாளர்கள் ஒரு விரிவான மதிப்பீட்டை செய்த பிறகு இலக்கு வைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அங்குள்ள கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர்.

இது சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நேரத்தை சேமித்து கொடுத்தும் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பயணிகளுக்கான அனுமதி செயல்முறையையும் சாதகமாக வைத்திருக்கிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளும் வாகனங்களும், நாட்டின் எல்லைகளை கடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் இயல்பாக சென்றாலும் சிலர் சட்டவிரோத பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயற்சிக்கின்றனர் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

உங்களுக்கு வந்துட்டு எல்லா ஏமாற்று வழிகளும் வெறும் கண்ணுக்கு தெரிவதில்லை இத்தகைய சூழலில் தான் அச்சுறுத்தல்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அவற்றை தடுப்பதற்கான முன் நுழைவு தரவுகளும் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று ICA குறிப்பிட்டுள்ளது.

இதன்படி தரவுகளின் ஆய்வின் மூலமாக, ICA கடந்த ஆண்டு (2025) 57,400 க்கும் நேர்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் வழக்குகளை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 43900 வழக்குகளை விட 30% அதிகமாக உள்ளது என்று ICA குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிகரித்த வெற்றி விகிதத்திற்கான முக்கிய காரணம் சோதனை சாவடிகளை கடக்கும் மக்கள் மற்றும் வாகனங்களின் பெரும் தினசரி நடமாட்டத்திற்கு இடையே அதிக ஆபத்தான அச்சுறுத்தல்களை கண்டறிய, ICA வின் ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயம் மையமானது 24/7 நுழைவுக்கு முந்தைய இடர் தரவு பகுப்பாய்வை பயன்படுத்துவதே முக்கிய காரணம் என்று ICA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK