பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??
இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டு நகருக்கு அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லண்டனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோட்டு பகுதியில் ஜூன் 19ஆம் தேதி அன்று மாலை 5:15 மணியளவில் இந்த மோதலானது நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர காலம மருத்துவக் குழுவினர் மற்றும் வான்வழி ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.