சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!
சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும்.
இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது. அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.இருப்பினும் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார்.