இன்று அறிமுகமாகியுள்ள “ப்ளூ டால்பின்”!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்!!

இன்று அறிமுகமாகியுள்ள "ப்ளூ டால்பின்"!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்!!

சிங்கப்பூரின் பரபரப்பான மற்றும் அதிகரித்து வரும் சிக்கலான கடல்சார் சவால்களைச் சமாளிக்க இரண்டாம் தலைமுறை கடல்சார் மீட்புக் கப்பலை சிவில் தற்காப்புப் படை அதிகாரப்பூர்வமாக இயக்கியுள்ளது.

“ப்ளூ டால்பின்” என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட புதிய படகை சட்ட அமைச்சரும் ,இரண்டாவது உள்துறை அமைச்சருமான எட்வின் டோங் இன்று(ஜூன் 25) அறிமுகப்படுத்தினார்.

ப்ளூ டால்பின் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேற்கு கடற்கரையில் சிவில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன்களை வலுப்படுத்த MRV2G (இரண்டாம் தலைமுறை கடல் மீட்புக் கப்பல்) தெற்கு கடற்கரையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தப்படும்.

இந்த கப்பலில் ஏவுதல் மற்றும் மீட்பு அமைப்பு(LARS) பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் RHIBs எனும் திடமான மேலோடு ஊதப்பட்ட படைகளும் இருக்கும்.அதில் ஆழமற்ற நீர் பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகளைச் செய்யக்கூடிய தீயணைப்பு அமைப்பும் இருக்கிறது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரானியில் உள்ள புதிய கடல்சார் தீயணைப்புப் பிரிவு தலைமையகம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan