சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல், சிங்கப்பூரின் தேசிய வயதுவந்தோர் நோய்த்தடுப்பு அட்டவணை (NAIS) திட்டத்தில் இரண்டு புதிய தடுப்பூசிகள் சேர்க்கப்படுகின்றன.
அவை ஷிங்கிரிக்ஸ், ஷிங்கிள்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும், மற்றும் PCV20, நிமோகாக்கால் நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும்.
இத்தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
இதற்கு தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளூர் பொது சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப மருத்துவமனைகளில் மானியத்துடன் இந்த தடுப்பூசிகளைப் பெற முடியும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள்,குடிமக்கள் தங்கள் மெடிசேவ் சேமிப்பைப் பயன்படுத்தி தடுப்பூசிகளுக்கான செலவுகளைச் செலுத்தலாம்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் ஃப்ளெக்ஸி-மெடிசேவ் திட்டத்தின் கீழும் கூடுதல் செலவுகளைத் தீர்க்கலாம்.
இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடிய வயதானவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, சுகாதாரச் செலவுகளை குறைக்கும் வகையிலும் உதவுகிறது.