நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன?

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன?

ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ் தொடர்ந்து எதிர்கொண்ட நெட்வொர்க் தடைகளால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், சிங்டெல் குழுமத் தலைவர் யுவான் குன்மன், நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தலைமை நிர்வாகி ஸ்டீபன் லூவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் இருமுறை ஏற்பட்ட நெட்வொர்க் கோளாறுகள், ஆஸ்திரேலிய முழுவதும் அவசர அழைப்பு சேவைகளையும் பாதித்தன. இதன் பின்னணியில், நிறுவன நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் குறைபாடுகள் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

யுவான் குன்மன், ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்திக்கும் போது, 2022, 2023 முதல் தொடர்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் 11 மாதங்களுக்கு முன்பு ஸ்டீபன் லூவை தலைமை நிர்வாகியாக நியமித்ததாகவும், நிறுவன மறுசீரமைப்பு இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நேரம் அவசியம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த மாதம் 18ஆம் தேதி ஏற்பட்ட அவசர அழைப்பு சேவைத் தடையைக் குறித்து நடந்து வரும் முதற்கட்ட விசாரணையில், மனித காரணிகளே காரணம் என வெளிவந்திருப்பதாக ஸ்டீபன் லூ நம்புவதாகவும் கூறினார். அதேசமயம், தலைமை நிர்வாகியின் கடமை சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதுதான் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சம்பவத்தால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்ட யுவான் குன்மன், சுயாதீன விசாரணை முழுமையாக மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆப்டஸ் வாரியத்திற்கும் நிர்வாகத்திற்கும் தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK