அதிர்ச்சி..!!குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முக்கிய நகரங்களில் நிலையான குளிர்விப்பு தீர்வுகளை கண்டறிய, நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) இரண்டு டேனிஷ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஐந்து ஆண்டு ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கு டென்மார்க்கின் க்ரண்ட்ஃபோஸ் அறக்கட்டளையிலிருந்து S$12 மில்லியன் நிதி கிடைத்துள்ளது.
இது அந்த அறக்கட்டளையால் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஆராய்ச்சி மானியம் மட்டுமல்லாமல், ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் பங்கேற்கும் முதல் ஆராய்ச்சி திட்டமாகவும் அமைந்துள்ளது.
கூட்டு செய்திக்குறிப்பின் படி, NTU, ஆல்போர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் இணைந்து, பெரிய நகரங்களில் ஆற்றல் நுகர்வை 30% வரை குறைக்கவும்,செலவுகளைச் சேமிக்கவும் அதேசமயம் கார்பன் வெளியீட்டையும் குறைக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட் நிலையான குளிரூட்டும் அமைப்பை உருவாக்க உள்ளன.
மேலும், அறைகள், தளங்கள், மற்றும் முழு கட்டிடங்களிலும் புதிய தொழில்நுட்பங்களை சோதிக்க, உள்ளூரில் இயற்பியல் சோதனை மையங்கள் (physical testbeds) உருவாக்கப்படவுள்ளன.