சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!!
சிங்கப்பூர்: மரைன் பரேட் சாலையில் நேற்று (16.08.25) காலை சுமார் 9:40 மணியளவில் ஒரு லாரி மையப் பிரிவை மோதி எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தானது மரைன் டிரைவ் பிளாக் 74 அருகே நடந்தது.
லாரி மோதியதில் ஒரு வெள்ளை நிற கார் மற்றும் ஒரு நீல நிற கார் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சுமார் ஐந்து மீட்டர் நீளமுள்ள பிரிப்பு வேலி கடுமையாக சேதமடைந்ததையும், வேலியின் ஒரு பகுதி வேரோடு பிடுங்கப்பட்டதையும் காட்டியது.
போலீசார் தெரிவித்ததாவது, மொத்தம் மூன்று கார்கள் மற்றும் ஒரு லாரி விபத்தில் சிக்கியுள்ளன.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 44 வயதுடைய ஆண் லாரி ஓட்டுநர் ஒருவர் தற்போது காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி செய்து வருகிறார்.