மரபணு அறிவியலால் மாரடைப்பை தடுக்கும் முயற்சி..!!

மரபணு அறிவியலால் மாரடைப்பை தடுக்கும் முயற்சி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் மரபணு மதிப்பீட்டு மையம் (GAC) இன்று (19.01.26) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.தேசிய இதய மையத்தின் ஏழாவது மாடியில் அமைந்துள்ள இந்த மையம்,குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா (FH) எனும் மரபணு நோயுக்கான மரபணு சோதனை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

 

இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் 30 முதல் செயல்பட்டு வரும் இந்த மையம், தற்போது பரிந்துரை செய்யப்பட்ட FH சந்தேக நபர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

 

இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 600 பேர் மையத்தை அணுகியுள்ளனர்.அவர்களில் 420 பேர் மரபணு சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

சிங்கப்பூரில் சுமார் 140 பேரில் ஒருவருக்கு FH இருப்பதாகவும், ஆனால் பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே கண்டறியும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இது போன்ற நோய் சிகிச்சை இல்லாவிட்டால், ஆரம்பகால இதய நோய்கள் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகமாகும் என்று கூறப்படுகிறது. 

எனவே எதிர்காலத்தில் பரம்பரை புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற மரபணு நோய்களுக்கும் இதேபோன்ற சோதனை திட்டங்களை விரிவுபடுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

 

Follow us on : click here 

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

 

WHATSAPP CHANNEL LINK

 

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

 

Telegram : https://t.me/t

amilansg