சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

26 வயது ஹேரி சியா யின் சியாங் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்று முடிவுக்கு வந்தார்.

இவ்வாறு இருப்பதை விட காவல்துறையால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார்.

அதிகாலை 3 மணி அளவில் சுவாசூ காங்கில் உள்ள ஒரு கடையில் அவர் நுழைந்தார்.

கடையில் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை திருடியதாக அங்கிருந்த காசாளிடம் கூறினார் அந்த குளிர்பான பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் எந்த நடவடிக்கும் எடுக்கப்படாது என்று அந்த 53 வயது காசாளர் தெரிவித்தார்.

இத எடுத்து சியா கடையிலிருந்து வெளியேறினார் பிறகு மீண்டும் அதே கடைக்கு சென்றார் இம்முறை அவர் கையில் உலோக தடி ஒன்று இருந்தது.

அதை அவர் அந்த காசாளரின் கழுத்தில் வைத்து மிரட்டினார் பணப்பெட்டியில் இருந்து பணத்தை தம்மிடம் தரும்படி காசாளர் இடம் சியா கூறினார்.

கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக காசாளர் தெரிவித்தார் இதை அடுத்து கடையிலிருந்து சியா வெளியேறினார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது சம்பவம் நிகழ்ந்த 2 மணி நேரத்துக்குள் சியா கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது ஜூலை 21ஆம் தேதி திங்கட்கிழமை அவருக்கு 2.6 மாதம் சிறை தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan