சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடிய நேரத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடிய நேரத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் நேற்று (01.01.26) புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூரின் தெம்பனீஸில் உள்ள OUR TAMPINES HUB என்ற கட்டிடத்தின் மேற்கூரையில் திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

திடீர் தீ விபத்து ஏற்பட்டதை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு சரியாக நள்ளிரவு 12:05 மணியளவில் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்து தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதற்கும் வானவேடிக்கை நடந்ததற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சிக்கு இடையே இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் நேர்ந்தது பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK