டிப்போ மற்றும் ஜூ சியாட் சாலையில் நடந்த சோதனையில் சிக்கிய 5 பேர்..!! காரணம்..??

டிப்போ மற்றும் ஜூ சியாட் சாலையில் நடந்த சோதனையில் சிக்கிய 5 பேர்..!! காரணம்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி 5 மற்றும் 6 ஆம் தேதி, டிப்போ சாலை மற்றும் ஜூ சியாட் சாலை பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 29 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவர்.

ரசீதுகள் மற்றும் விபச்சாரம் தொடர்பான பொருட்களை ஆதாரமாக பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

40 வயதுடைய ஒருவர் இன்று (07.02.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.மற்ற நான்கு நபர்கள் விசாரணையின் கீழ் உள்ளனர்.

பெண்கள் சாசனத்தின்படி, விபச்சாரத்தில் இருந்து லாபம் ஈட்டியவர் அல்லது மற்றவர்களுக்கு உதவியவர் ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் $100,000 அபராதம் உட்பட கடுமையான தண்டனைக்கு உட்படுவர்.

காவல்துறை சட்டவிரோத விபச்சாரத்தை முறையாக ஒடுக்கி, சட்டத்தை மீறுபவர்களுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள், சந்தேகமான செயல்பாடுகளை பற்றி போலீசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK