இந்த விநியோக தட்டுப்பாடுகளுக்கு துறைமுகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தாமதங்களாக் காரணம் எனவும், இது எங்களின் திட்டமிட்ட பல விநியோகங்களைப் பாதித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி எனவும் அந்நிறுவனம் நேற்று (ஏப்ரல் 17) தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
உலகில் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு தேவைகள் கிட்டத்தட்ட 20% ஹோர்முஸ் நீரினை வழியாகவே விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.