மரணத்தை ஏற்படுத்திய குப்பை லாரி ஓட்டுநருக்கு 6 மாத சிறைத்தண்டனை..!!!
கடந்த ஆண்டு(2024) பிப்ரவரி 11ஆம் தேதி காலை 6 மணி அளவில் பிரதிவாதி பல இடங்களில் இருந்து குப்பைகளை சேகரித்து செனோகோவில் உள்ள எரிக்கும் ஆலைக்கு குப்பை லாரியை ஓட்டிச் சென்றதாக வழக்கு கோப்பு காட்டுகிறது.
காலை 9:50 மணி அளவில் பிரதிவாதி உட்லண்ட்ஸ் அவன்யூ 8 இன் இடது புறப் பாதையில் வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அட்மிரால்டி சாலை வெஸ்ட் ஸ்லிப் சாலையில் நுழைந்தபோது குப்பை லாரியின் இடது பக்கத்தில் இருந்து zebra crossing lines இன் குறுக்கே மிதிவண்டியில் சென்று பாதிக்கப்பட்டவரை அவர் கவனிக்காமல் அவர் மீது மோதி இருக்கிறார்.
குப்பை லாரி ஓட்டுநர் ஏதோ ஒன்றை கடந்து விட்டதாக தவறு இருப்பதாக உணர்ந்துள்ளார் அவர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது பாதிக்கப்பட்டவர் குட்டையில் அருகினாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்து கிடப்பதைக் கண்டார்.
இறந்தவரை குப்பை லாரியின் அடியில் இருந்து மீட்கப்பட்டு பின்னர் அவரது உடலை சோதனை செய்தபோது இதய துடிப்பு மற்றும் சுவாசம் இல்லை என அறியப்பட்டது. மேலும் காலை 10:09 மணிக்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவர் தலையில் பலத்த காயம் காரணமாகவே இறந்துள்ளார் எனவும் தடவியல் அடையாளத்தின் மூலம் தெரிய வந்தது. இறந்தவர் 60 வயதான லின் குன்ஃபெங் ஆவார்.
கானா குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 64 வயதான பிரதிவாதி ரோஸ்லி போங் நோர் நேற்று (18ஆம் தேதி) குற்றத்தை ஒப்பு கொண்டதாக வீடியோ கால் நிறுவனத்தின் ஆங்கில செய்தி வரைய அமைப்பான CNA தெரிவித்துள்ளது.
60 வயது சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பாதசாரி கடப்பதை கவனிக்க தவறியது மூலம் அவரை மோதிக்கொன்ற குப்பை லாரி ஓட்டுநருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும், அவரது ஓட்டுனர் உரிமம் 8 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.