ஆண்டுகளில் பணிபுரிவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களை வேலைக்கு ஒப்பந்த மூலமாக எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பொருளியல் வளர்ச்சி கழகத்துடன் பிப்ரவரி 5ஆம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது உலகின் மிகப்பெரிய விமான பழுது பார்க்கும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி பொதுமக்களுக்கு விமான கண்காட்சி திறக்கப்படுவதற்கு முன்பு பிப்ரவரி 5ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலமாக தொழிலாளர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் விமான பராமரிப்பு சீரமைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான இலக்கை அடையும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 2000 திறன் வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்களை இந்த நிறுவன ம் கொண்டிருக்கிறது எனவே அதன் வருங்கால வளர்ச்சிக்கும் அதிக பணியாளர்கள் தேவைப்படுவதால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.