பொதுமக்கள் பார்வைக்கு - ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..??
சிங்கப்பூரில் ஜனாதிபதி அலுவலகம் இன்று (ஏப்ரல் 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி மாளிகை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
எப்போது? ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும்.
சிறப்பு என்ன? பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்ப்பதோடு மட்டுமல்லாது, அங்கு பாரம்பரிய மலாய் பாடல்கள், மலாய் நடனங்கள் மற்றும் இந்திய செவ்வியல் நடனங்கள் உட்பட நாட்டினுடைய பன்முக கலாச்சாரம் நிகழ்வை வெளிப்படுத்தும் பல்வேறு விதமான இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழலாம்.
என்னென்ன இடம்பெற்றுள்ளன? இந்நிகழ்வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதமாக கைவினைப் பொருட்களை உருவாக்குதல், சிங்கம் கருணை சிங்கம் இருக்கைகளுக்கு வண்ணம் தீட்டுதல், புல்வெளி பந்து விளையாட்டு மற்றும் புதையல் வேட்டை போன்ற பல்வேறு விதமான கலந்து கொள்ளும் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பு எதற்காக? வரவிருக்கும் தொழிலாளர் தினம் மற்றும் ஈத் அல் ஃபித்ர் தினங்களை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கட்டண சீட்டு எவ்வளவு? பெரியவர்களுக்கு – $20 நாலு முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் – $10
குறிப்பு: சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் அதனுடன் தங்கள் குடும்பத்தினருடன் வரும் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களும் இலவசமாக வர அனுமதி உண்டு.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களில் பங்கேற்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் அனைத்தும் பிரசிடென்ஷியல் சேலஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறப்பு: பார்வையாளர்கள் இதய நாளில் இஸ்தானா வில்லாவை சுற்றி பார்க்கவும் பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளால் நமது தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு பரிசுகளையும் காண்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
இஸ்தானாவின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் ஒரு வழிகாட்டி மூலம் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.