சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

திட்டத்தின் நோக்கம் :
சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியா
திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள் இருக்கும் இடத்தில் விடப்படும்.

அவை ஏடிஸ் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கத்தால் உருவாகும் முட்டைகள் பொறிக்கப்படுவதில்லை.

ஆண் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பது இல்லை. அதனால் அந்த கொசுக்களால் எந்தவித பாதிப்பும் மனிதர்களுக்கு வராது.

அந்த வகை கொசுக்கள் ஆனது ஒரு வாரத்திலேயே இறந்துவிடும் தன்மை கொண்டவை.

இந்த திட்டமானது முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு பிராடல் ஹைட்ஸ் (Braddel Heights) என்ற பகுதியில் சோதனைப்படுத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏடிஸ் கொசுக்களை உருவாக்கும் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையில் ஒரு வாரத்திற்கு 5 மில்லியன் கொசுக்கள் உருவாக்கும் வசதி இருந்தது.

இந்த திட்டம் குறித்து தேசிய சுற்றுபுற அமைப்பு கூறியதாவது:
👉🏻முதன் முதலில் திட்டத்தைச் செயல்படுத்திய போது பெண் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையானது 80% முதல் 90% வரை குறைந்திருப்பதாக கூறியது.


👉🏻சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

👉🏻புக்கிட் பாஞ்சாங், பயனியர், தோ பாயோ, லிட்டில் இந்தியா மற்றும் அங் மோ கியா ஆகிய ஐந்து பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியது.

👉🏻இந்தத் திட்டத்தால் டெங்கு காய்ச்சல் பரவும்  சம்பவங்கள் ஆனது 70% குறைந்துள்ளதாகவும் தேசிய சுற்றுப்புற அமைப்பானது கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK