சிங்கப்பூரின் நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திட்டங்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....
சிங்கப்பூரின் 10 க்கும் அதிகமான புதிய வீடமைப்பு குடியிருப்பு பகுதிகளில் 80000 க்கும் அதிகமான வீடுகள் கட்டப்படவுள்ளன.
மேலும் பசுமையான பல பகுதிகள் மற்றும் கடைப்பகுதிகளைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கான திட்டங்களை நகரச் சீரமைப்பு ஆணையம் இன்று (ஜூன் 25) வெளியிட்டது.
இவை ஆணையத்தின் வழிகாட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.சிங்கப்பூரின் நிலத்தை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டி திட்டம்.