ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார்.

அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சியாவோ ஹொங்ஷு உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும் உதவிக்காக போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வாகனங்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், சம்பவ இடத்தில் அதிவேகமாக வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் முக்கிய கிரேன் இயந்திரத்தின் கேபிள் உடைந்ததாகவும், அது தொழிலாளி சிக்கிக்கொள்ள காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தால் யாருக்கும் பெருமளவிலான காயம் ஏற்பட்டதா என்பதைப்பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan