கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தில் மோசடியா? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முழுமையாக படிக்கவும்.
கடந்த மாத நடுப்பகுதியில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் இருந்து டிஜிட்டல் கட்டண உரிமத்தைப் பெற தவறியதால் சிங்கப்பூர் சந்தையில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
டோக்கனைஸ் எக்ஸ்சேஞ்ச் சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு செய்து இயக்கிய அமேசிங் டெக் நிறுவனம் சந்தேகத்திற்குரிய மோசடி பரிவர்த்தனைகளுக்காக விசாரிக்கப்பட்டது.
மேலும் அதன் நிறுவனர் ஆங் கை யூ மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து உள்ளூர் சந்தையில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு பயனர்கள் தங்கள் முதலீட்டு நீதியை படிப்படியாக திரும்பப் பெற முடியும் என்று முதலில் தெரிவித்ததாக மீடியா கார்பின் ஆங்கிலச் செய்தி வலைதளமான சிஎன்ஏ தெரிவித்திருந்தது.
கிரிப்டோ கரன்சி வர்த்தக தளமான டோக்கனைஸ் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் கடந்த மாதம் அதன் உள்ளூர் செயல்பாடுகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய முதலீடு செய்த நிதியை இன்னும் திரும்பப் பெற முடியவில்லை என பயனர்கள் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளன.