டெலிவரி ஊழியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு டெலிவரி ஓட்டுநர், பையில் இருந்து சிந்திய கஞ்சியை மீண்டும் கிண்ணத்தில் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர் கடும் வெறுப்பையும் அதிர்ச்சியையும் அடைந்ததாக தெரிவித்தார்.
உணவு விநியோக தளமான கிராப் தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட நபரின் டெலிவரி சேவை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு, முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பில் எந்தவொரு மீறலுக்கும் நிறுவனத்துக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை உள்ளதாகவும், இதை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் கிராப் பேச்சாளர் கூறினார்.
நிறுவனம் தற்போதைய விசாரணையின் போது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளது. “இந்த சம்பவம் எங்கள் சேவை தரத்தை பிரதிபலிக்கவில்லை, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம்,” என்று கிராப் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பையும், டெலிவரி தரத்தையும் மேம்படுத்த வணிக கூட்டாளர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும், போக்குவரத்தின் போது எந்தவொரு கசிவையும் தவிர்க்க புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
முந்தைய அறிக்கைகளின்படி, கடந்த 22 ஆம் தேதி நண்பகலுக்கு முன்பு, உணவு விநியோக தளமான கிராப் மூலம் ஆங் மோ கியோவில் உள்ள ஒரு கடையில் இருந்து ஒரு பெண் கஞ்சியை ஆர்டர் செய்ததாகக் குறிப்பிடப்பட்டது.
முதலில் அவளுக்கு தான் ஆர்டர் அதில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கிடைத்தது. அதை சாப்பிட்ட பிறகு, டெலிவரி செய்பவர் பையில் இருந்து சிந்திய கஞ்சியை மீண்டும் கிண்ணத்தில் ஊற்றியதாகக் கூறப்பட்டது. இது அவளுக்கு மிகவும் வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது.