சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!
தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) பெருமளவிலான வனவிலங்கு கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்தசம்பவத்தில், தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு சரக்கு கப்பல் சிங்கப்பூர் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.விசாரணையின் ஒரு பகுதியாக அந்த சரக்கு கப்பல் தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 17 காண்டாமிருகக் கொம்புகள் (55.4 கிலோகிராம்), மண்டை ஓடுகள், நகங்கள் உட்பட 26.2 கிலோகிராம் எடை கொண்ட சிங்கம் மற்றும் புலி எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நைஜீரிய ஆண்கள் தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.