ஆனாலும் பொங்கலுக்கான வியாபாரம் சற்று மந்தமாக உள்ளது என்று கடைக்காரர்கள் சிலர் இந்த ஆண்டு தெரிவித்துள்ளனர். கரும்பு, வாழை இலையும் பெரும்பாலும் இந்தியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்னரே வரவழைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலையானது சற்று அதிகரித்து உள்ளன. பல நாடுகளில் மழை வெள்ளம் மோசமாக இருப்பதால் சற்று விளைச்சலை பாதித்துள்ளது என வியாபார மேலாளர் திரு பாஸ்கரன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை வார நாட்களில் வந்தாலும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக பொங்கல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.