விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..?

விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..?

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவங்களைத் திருடியதாக வெளிநாட்டினர் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் முறையே 37 வயது ஆஸ்திரேலியர் மற்றும் 50 வயது அமெரிக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு(2025) நவம்பர் 19ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இரண்டு வாசனைத் திரவக் கலன்கள் காணாமல் போனது ஊழியருக்குத் தெரியவந்தது.

மற்றொரு சம்பவம் ஆகஸ்ட் 5ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் 1ஆம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் உள்ள கடையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு S$310 மதிப்புள்ள வாசனைத் திரவம் திருடப்பட்டதை கடை ஊழியர் கவனித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.

விசாரணையில், திருட்டில் தொடர்புடையவர் 50 வயது அமெரிக்கப் பயணி என அடையாளம் காணப்பட்டார்.

அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த இரண்டு தனித்தனி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, ஆஸ்திரேலியர் மற்றும் அமெரிக்கர் ஆகிய இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

விமான நிலையக் கடைகளில் பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் திருடப்பட்ட வாசனைத் திரவங்களின் மொத்த மதிப்பு S$760 என தெரிவிக்கப்பட்டுள்ளது.