உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..!

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் தொழில் பூங்கா (Woodlands Industrial Park E7) பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் தகவல் கிடைத்ததுள்ளது.

உணவங்காடியின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு கடையின் சமையலறையில் தீப்பற்றியதுடன், அங்கிருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயில் சமையல் செய்யப்பட்ட உணவு மற்றும் சமையலறையின் புகை வெளியேற்றும் குழாய் (exhaust duct) ஆகியவை சிக்கியிருந்தன.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏணியைப் பயன்படுத்தி மேலே ஏறி, தீயணைப்பான் மற்றும் தண்ணீர் குழாய் மூலம் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் SCDF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமையலறைகளில், குறிப்பாக உணவங்காடி மற்றும் உணவகங்களில் உள்ள புகை வெளியேற்றும் குழாய்களில் தீப்பற்றுவதைத் தடுப்பதற்கான உரிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு SCDF பொதுமக்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.