சிங்கப்பூரின் துணைப் பிரதமரை அழைத்த ப்ளூம்பெர்க் தளம்..!!!
ப்ளூம்பெர்க் நியூ எகானமி 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ப்ளூம்பெர்க்கின் ஒரு உலகளாவிய தளமாகும். இது வளர்ச்சி சார்ந்த சந்தைப் பொருளாதாரங்களின் மாற்றம் குறித்த உரையாடல் மற்றும் விவாதங்களை இயக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கான் கிம் யோங்கின் வாழ்க்கை பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டையும் உள்ளடக்கியது என்று ப்ளூம்பெர்க் தளம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
சர்வதேச வர்த்தகம், பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த அவரது நுண்ணறிவுகள் ஆலோசனைக் குழுவிற்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கும்.
ப்ளூம்பெர்க்கின் புதிய பொருளாதார ஆலோசனைக் குழு மன்றமானது சிங்கப்பூரில் நடத்தப்படுவது இது 5 – வது முறையாகும். இந்த ஆண்டுக்கான ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றம் நவம்பர் 19 முதல் 21 வரை சிங்கப்பூரில் நடைபெறும்.
சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவில் கௌரவ இணைத் தலைவராக சேர அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் மற்ற இரண்டு கௌரவ இணைத் தலைவர்கள் முன்னால் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ மற்றும் முன்னாள் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி ஆவர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியின் முன்னாள் டீன் மற்றும் தற்போதைய பயிற்சிப் பேராசிரியரான மெரிட் ஜானோவ்; சண்டோரி ஹோல்டிங்ஸின் தலைவர் தாகேஷி நினாமி; மற்றும் ஓஃபர் குளோபல் குழுமத்தின் தலைவர் இயல் ஓஃபர் ஆகியோர் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக உள்ளனர்.