பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..??

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!! பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..??

பாசிர் பாஞ்சாங் நேற்று (ஜூன் 12) நீர்ப்படைக்கலம் ஒன்றின் மீது திடீரென மோதி அந்த படகு காலை 9:30 மணியளவில் மூழ்கியது.

இது குறித்த தகவலை சிங்கப்பூர் கடல் துறைமுக ஆணையம் அறிக்கையாக வெளியிட்டது.

ஆணையம், காவல்துறையின் கடலோர காவல் படை, சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையின் கடல் துறை பிரிவு ஆகியவை தேடல் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

படகு கவிழ்ந்து அதிலிருந்த மூவரும் மூழ்கி உள்ளனர். 38 வயதில் இருந்து 53 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

உடனே அவர்களை பாசிர் பாஞ்சாங் கப்பல் துறை மேடைக்கு அருகே நீரிலிருந்து மீட்டனர் அதன் பிறகு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை உதவி மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

நீர்ப்படைக்கலத்தில் உள்ள ஊழியர்களுக்கு எந்த காயமும் இல்லை என ஆணையம் தெரிவித்தது துறைமுக செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படவில்லை.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வரவேண்டாம் என கப்பல்களுக்கு தகவலும் அனுப்பப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK