தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..??
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6 வேட்பு மனு பரிசீலனை நாள்: ஏப்ரல் 7 வேட்ப மனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9 வாக்குப்பதிவு தேதி: ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் தேதி: மே 4.
தேர்தல் முடியும் வரை நடப்பில் இருக்கும் சில முக்கிய விதிமுறைகள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். 👉அரசு புதிய திட்டங்களையோ அல்லது சலுகைகளும் அறிவிக்க கூடாது. 👉கட்சிகள் பிரச்சாரத்தின் போது கட்சி நடவடிக்கைகளை தவிர தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
👉அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது. 👉அரசு விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது. 👉அமைச்சர்கள் பதவியில் எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்யக்கூடாது. 👉50,000 க்கும் மேல் ரொக்கமாக நீங்கள் எடுத்துச் செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்கள் தேவைப்படும்.