மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.

வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும் என்று புக்கிட் ஆமான் போதைப் பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குனர் ஹூசேன் ஒமார் கான் கூறியுள்ளார்.

பூச்சோங் பட்டறையிலும், செராஸ் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 31 வயது மற்றும் 33 வயது உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஃபென்டனைல் திரவம் அடங்கிய 400 மின் சிகரெட் கருவிகள், 612.12 கிலோகிராம் எடையுள்ள மெத்தெம் ஃபெடமின், 6.4 கிலோகிராம் எடையுள்ள எரிமின், 5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த போதைப் பொருட்களின் மதிப்பு 31.57 மில்லியன் ரிங்கிட் என்று திரு.ஹுசைன் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஆண்டிலிருந்து (2025) போதைப் பொருள்கள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

ஃபென்டனைல் நிரம்பிய பொருட்களை பொட்டலமிட மலேசியாவை ஒரு தளமாக இந்த போதைப் பொருள் கும்பல் பயன்படுத்தியதாக ஹூசைன் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK