சிங்கப்பூரில் தேர்வு எழுதியுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு O- Level தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.
தனியார் நிலையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு கழகத்தின் இணையதளம் மூலம் பிற்பகல் 2:45 மணியிலிருந்து தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு ஏற்றவாறு தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்வி நிலையம், தொழில்நுட்ப கல்வி கழகம், பல துறை தொழிற்கல்லூரி போன்ற படிப்புகளை தொடரலாம்.