யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!!

யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!!

சிங்கப்பூர்:யிஷூனில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஜனவரி 24ஆம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது.

பிளாக் 120 இன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்து எரிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து மாலை 4:50 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் குழாய்களின் மூலம் தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த வீட்டில் வசித்த ஆறு பேர் கொண்ட குடும்பம் வெளியே இருந்ததாக கூறப்படுகிறது.

தீயால் வீட்டின் உட்புற பகுதிகள் சேதமடைந்துள்ளன.குறிப்பாக வாழ்க்கை அறை மற்றும் கூரைப் பகுதிகள் புகையால் கருமையாகியுள்ளது.

யிஷூன் GRC நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான கே. சண்முகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தற்காலிக தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், யிஷூன் நகர சபையும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவும் உதவியும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK