அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த மூன்று பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்த 41 பேரை அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டுள்ளன.

“உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விபத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடு வழங்க உள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.