சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.!

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையிலிருந்து (CTE) பான் தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கி வெளியேறும் வழியின் அருகே, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை சாலை விபத்து ஏற்பட்டது.

காலை 8.00 மணி முதல் 8.30 மணிக்குள், CTE-யின் நுழைவாயிலற்ற மின்னணு சாலைச் சுங்கச்சாவடி (ERP) வெளியேறும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 25 வயதான இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிந்து, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறிப்பாக, விபத்து நடந்த நேரத்தில் அந்தச் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளிடம் டாஷ்கேம் காணொளிப் பதிவுகள் இருந்தால், அவற்றைப் பகிருமாறு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகளைத் திரட்டும் முயற்சியாக, ‘பெ சியா லோர் – சிங்கப்பூர் சாலை’ என்ற பிரபல முகநூல் பக்கத்திலும் குடும்பத்தினர் மற்றும் இணையவாசிகள் சார்பில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு சிறிய டாஷ்கேம் பதிவு கூட இந்த விபத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்து, ஒரு இளம் உயிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க உதவக்கூடும். எனவே, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் அப்பகுதியில் பயணித்தவர்கள் தங்களிடம் உள்ள காட்சிகளைப் பகிர்ந்து உதவுமாறு குடும்பத்தினர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.