3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 3 பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள சட்ட நிறுவனங்கள் மீது அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது சிங்கப்பூரில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வழக்கில் சட்ட சேவைகளை வழங்கியதாகத் தெரியவந்த சில சட்ட நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுவரை நான்கு சட்ட நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில், இரண்டு நிறுவனங்களுக்கு முறையே S$555 மற்றும் S$18,500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஒரு நிறுவனத்திற்கு S$1,295 அபராதம் விதிக்கப்படவுள்ளதாக நீதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் எழுத்துப்பூர்வ விளக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக, ஒரு நிறுவனம் தனிப்பட்ட முறையில் கண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வழக்கறிஞர் ஒழுங்கு நடவடிக்கைக்காக சிங்கப்பூர் சட்ட சங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மொத்தமாக 24 சட்ட நிறுவனங்கள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 11 நிறுவனங்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இதில், 4 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கண்டிப்பும் அளிக்கப்பட்டது.மீதமுள்ள 7 நிறுவனங்களுக்கு எதிராக எந்தவொரு ஒழுங்குமுறை நடவடிக்கையும் தேவையில்லை என நீதித்துறை தீர்மானித்துள்ளது.
எனினும் மீதமுள்ள 13 நிறுவனங்களைப் பற்றிய மதிப்பாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் எந்தவொரு வழக்கறிஞர்களையும் ஒழுங்கு நடவடிக்கைக்காக பார் கவுன்சிலுக்கு அனுப்புவது அவசியமா என்பதை பரிசீலித்து வருகிறது.
சட்ட அமைச்சகம் ஒரு அறிக்கையில், அனைத்து உள்ளூர் சட்ட நிறுவனங்களும் வழக்கறிஞர்களும் சட்டத் தொழில் சட்டம் 1966 இன் கீழ் பணமோசடி எதிர்ப்பு கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்று கூறியது.
ஒரு தனிப்பட்ட வழக்கறிஞர் தனது பணமோசடி எதிர்ப்பு கடமைகளை மீறினால், அவர் அபராதம், இடைநீக்கம் அல்லது பயிற்சி உரிமத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த வழக்கு, சட்ட துறையின் பொறுப்புணர்வையும், நெறிப்புணர்வையும் நினைவுபடுத்தும் வகையில், சிங்கப்பூர் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.