வேளையில் அடர் சாம்பல் நிற பிக்கப் டிரக் ஒன்று சிக்னல் காட்டாமல், வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு திடீரென திரும்பியதால் பாதையின் நடுவே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திடீரென மோதியதில் மோட்டார் சைக்கிளும் அதிலிருந்த நபரும் தரையில் விழுந்தார். சைக்கிள் ஓட்டுநர் மெதுவாக சாலையின் ஓரமாக நகர்ந்து சென்று அமர்ந்தார். அந்த வழியே சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அவர் காயத்துடன் இருப்பதை பார்த்து அவரை பரிசோதிக்க உதவியுள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியும் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
விபத்து குறித்த தகவல் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு நேற்று (மே 5) காலை 8:30 மணி அளவில் கிடைத்ததாக கூறினர். பிறகு காயமடைந்த நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் 31 வயதை சேர்ந்தவர் எனவும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.